ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாகவும் மேலும் கோத்தாபய ராஜபக்ஷ தற்போதும் அமெரிக்க குடிமகன் என்று பரவிவரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவரது சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.