நாடாளுமன்ற சபையின் முதல் கூட்டம் இன்று பிற்பகலில் கூடும்!

நாடாளுமன்ற சபைக் கூட்டம் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதற்கு சமூகமளிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பிரதிநிதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் பிரதிநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர் ஹாசிம் ஆகியோரும் இக்கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர்.

மேலும் உச்ச நீதிமன்ற நியமனங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.