ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை விற்ற சந்தேகநபர் கைது!

ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை 12 ஆயிரம் ரூபாவிற்கு விற்ற சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனியார் டெக்ஸி சேவை வழங்குநருக்கு வழங்கப்பட்ட மூன்று ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் பண்டாரகம பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேகநபர் மூன்று ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை 12 ஆயிரம் ரூபாவிற்கு விற்ற தாக காவல்துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.