நாட்டில் தற்போதைய கொரோனா தொற்று நிலவரத்தை கருத்திற்கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட வழிபாடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பசுமை பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்த வழிபாடு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து விடுப்படுவதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த ஆலயத்தில் விசேட வழிபாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்றிலிருந்து விடுப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட குறித்த வழிபாடு நடவடிக்கைகளில் யாகம் ஒன்று நடாத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.