ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனை முடிக்கப்பட வேண்டும் -இராணுவத்தளபதி

625.500.560.350.160.300.053.800.900.160.90 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 5

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்படி மொத்தமாக 10,655 பிசிஆர் பரிசோதனைகள் நேற்று இலங்கையில் நடத்தப் பட்டுள்ளன.

இதுவரை கொவிட்- 19 பாதிப்புற்ற 545,043 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தில் கூறுகையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் படி இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனைகளை நிறைவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.