பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையருக்கு சிறை தண்டனை!

சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட அவர், கடந்த 2017ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் காவற்துறையினரால் ப்ரிஸ்பேனில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு ஆறரை வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.