பொரளை காவல் நிலையத்தில் உள்ள 41 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கொவிட் தொற்றுக்குள்ளான அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தற்போது களுத்துறை காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை காவல்நிலையத்திற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.