கொரோனா கொத்தணி குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்த எச்சரிக்கை!

நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் பாரியளவில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றுவரை நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனைகளில் தாமதம் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையெனில் நாடு அபாயகரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.