அனுரவிற்கு ரஞ்ஜன் ராமநாயக்க அழைப்பு

Ranjan Ramanayake
Ranjan Ramanayake

அநுரகுமார திஸாநாயக்க சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முன்வருமாறு இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மாத்தறையில் நேற்று (Nov.10) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

“நாட்டின் எதிர்காலத்தினை தீர்க்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முதன்மை வேட்பாளர்கள் இருவரிற்கிடையில் போட்டி நிலவுகின்றமையினால் ஏனையவர்களிற்னு அளிக்கப்படுகின்ற வாக்குகளினால் பிரதான வேட்பாளர்களிற்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

அநுரகுமார திசாநாயக்க, மஹேஷ் சேனநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவைப் போன்று நாட்டை ஊழல் மோசடிகளில் இருந்து பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமான, சிறந்ததொரு நாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள்.

ஆனால் எமது எதிர்த் தரப்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயங்கள் அனைத்துக்கும் முரணானவர். பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர். இப்படிப்பட்டவரால் நாட்டைக் கொண்டுசெல்ல முடியாது.

நாட்டை குடும்ப ஆட்சியில் இருந்து பாதுகாக்கவும் மோசடிகளில் இருந்து பாதுகாக்கவும் சஜித் பிரேமதாச வெற்றிபெறவேண்டும். அதற்காக அநுரகுமார திசாநாயக்க சஜித் பிரேமதாசவுடன் இணைந்து நாட்டை பாதுகாக்க முன்வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.