ரெலோ யாழ். மாவட்ட கிளையின் முடிவிற்கு தலைமை கண்டனம்

telo01
telo01

கட்சியின் தலைமைக்குழு எடுத்த முடிவிற்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மீதும் அதற்கு ஆதரவாக செயற்படும் கட்சி அங்கத்தவர்கள் மீதும் கட்சியானது யாப்பு விதிகளுக்கமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் நேற்று (Nov.10) ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கிளையின் முடிவிற்கு தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளதுடன் ரெலோ தலைமைக் குழு எடுத்த தீர்மானம் கட்சியின் உறுதியான இறுதி முடிவாகும். இதில் எந்தவித மாற்று கருத்திற்கும் இடமில்லை.

இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதற்கு யாழ். மாவட்ட குழு எடுத்த முடிவானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. கட்சியின் தலைமைக் குழு எடுத்த முடிவிற்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மீதும் அதற்கு ஆதரவாக செயற்படும் கட்சி அங்கத்தவர்கள் மீதும் கட்சியானது யாப்பு விதிகளிற்கமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும். அதனைத் தொடர்ந்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்களா? இல்லையா? என்பது தொடர்பாக கட்சி தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.