இலங்கையில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனமான பிட்ஸ் எயார் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருந்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இந்த விமான சேவையை முன்னெடுப்பதற்கான பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்தியாவின் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களுக்கான நேரடி விமான சேவையை இந்த விமான நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது