நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 7 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 267 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்தைக் கடந்துள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.