மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் பணி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேல் மாகாணத்திற்குள் இதுவரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் பணிகள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்து இடை நிறுத்தப்படுவதாக மேல் மாகாண பிரதம செயலாளர் மற்றும் பிரதம கணக்கியல் அதிகாரிகளினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் www.motortraffic.wp.gov.lk இணைய தளத்திற்குள் பிரவேசித்து வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.