வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த நபரொருவரின் வீட்டில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற சமய நிகழ்வில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன் மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதில் மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில், கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கும், பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி மஸ்கெலியா பகுதியில் இதுவரை 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான இருவரும் கடும் சுகாதார பாதுகாப்புடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.