ஊரடங்கு உத்தரவை மீறிய 200 பேர் கைது!

Photo 2
Photo 2

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 200 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகியே பகுதிகளிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 2,393 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 356 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக மொத்தமாக 78 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.