புத்தளம், ஆனமடுவ பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் ஆனமடுவ காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பாளர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்த விபத்தில் ஆனமடுவ குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியும் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி 38 வயதுடைய நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை துரத்திச் சென்ற வேளையிலேயே காவல்துறையினர் பயணித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் சுற்றுவட்ட கட்டிடத்தில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.