கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை ஒப்படைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை துறைமுக சேவைகள் பொது ஊழியர் சங்கம் சமர்ப்பித்த இந்த கடிதத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் பராமரிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் இப்போது மறந்துவிட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.