கமல் குணரட்னவை சந்தித்தார் விமானப் படையின் புதிய தளபதி !

75929eb1a07116046adc9fbf8550b600 XL 2
75929eb1a07116046adc9fbf8550b600 XL 2

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நேற்று (நவம்பர், 04) சந்தித்தார்.

ஏயார் சீப் மர்ஷல் சுமங்கள டயஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட விமானப் படைத் தளபதி வெற்றிடத்திற்கே எயார் மார்ஷல் பத்திரன நியமிக்கப்பட்டார். இவர் இலங்கை விமானப் படையின் 18வது தளபதி ஆவார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் புதிய விமானப்படை தளபதி ஆகியோரின் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கது