மேலும் 199 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா

images 2
images 2

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 199 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 258 ஆகவும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 1350 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.