43 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்!

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளவர்களில் 43 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

தனியார் உணவகங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 63,644 ஆக அதிகரித்துள்ளது.