பொது மக்களை பயணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பிரதி காவல்துறை மா அதிபர் வேண்டுகோள் !

625.500.560.350.160.300.053.800.900.160.90 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 1

வார இறுதிநாட்களில் பொது மக்கள் பயணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கவல்துறை ஊடக பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோ ஹண தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை வார இறுதி தினமாகும். பொது மக்கள் தமது நேரத்தை வீடுகளிலேயே கழிக்குமாறும், கொவிட் -19 கொரோனா தொற்று தடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

வார இறுதியில் கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாகத் தடை செய்யப் பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதி மக்களும் இதனைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், வார இறுதியில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறை வீதி தடைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.