தனிமைப்படுத்தப்பட்ட பதுகம புதிய குடியேற்றம் மீண்டும் திறப்பு!

Quar 300x170 1
Quar 300x170 1

நாட்டில் தற்பொழுது அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை அடுத்து தனிமைப்படுத்தப்பட் டிருந்த களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுகம புதிய குடியேற்றப் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் அறிவிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது.

அதேபோன்று கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேச சபை பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா  குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை,மேல்மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஒன்பதாம் திகதியுடன் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.