கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல்நீதி மன்றினால் மரண தண்டனை!

dc Cover mfla6j3tm4sn7ki6qde40ecuf3 20170326040637.Medi
dc Cover mfla6j3tm4sn7ki6qde40ecuf3 20170326040637.Medi

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் கடந்த 2005 ஆண்டு காலப்பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயான பணக் கொடுக்கல் வாங்கல் தகராறுடன் கூடிய முறுகல் நிலையைத் தொடர்ந்து,

மெனிக்பாம் கிராமத்தில் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மாமனாரை நள்ளிரவு வேளையில் கோடரியால் தாக்கி கொலைசெய்த குற்றச்சாட்டில் கைதுசெய்த மருமகனுக்கே வவுனியா மேல்நீதி மன்றினால் நேற்றுமுன்தினம் (04.11.2020) மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

2018.08.20 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னரே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.