மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 31 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் எஸ்.எம்.ஜி.கே. பெரேரா தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகமானோர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அதுபோல் மாத்தளை மாவட்டத்தில் 339 குடும்பங்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இந்தக் குடும்பங்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் திட்டத்தை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.