கொரோனா தொற்றாளர்களை வேகமாக இனங்காண்பதற்காக ரெபிட் என்டிஜன் முறையில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள கருவி தொடர்பில்ஆய்வு நிலைய மருத்துவர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
அதில், குறித்த கருவியினை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு முறையானநடைமுறைகளை கடைப்பிடிக்காது சுகாதார அமைச்சின் கீழ் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.