வெளிநாடுகளில் இருந்து மேலும் 30 பேர் நாடு திரும்பினர்!

download 2 4
download 2 4

கட்டார், இந்தியா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 30 பேர் இன்று(07) நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரின் டோஹாவிலிருந்து 18 பேரும், இந்தியாவின் சென்னையிலிருந்து 11 பேரும், அபுதாபியிலிருந்து ஒருவரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு திரும்பியவர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.