களுத்துறையில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது!

kaithu

களுத்துறை தெற்கு சென்ரல் சந்தியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டர் சைக்கிளில் பயணித்த 7 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (06) மாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கைக்குண்டு ஒன்று, ரி 56 ரக 4 தோட்டாக்கள், 4 வாள்கள் மற்றும் 6 கத்திகளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 தொடக்கும் 36 வயதிற்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.