மாங்குளத்தில் கேரள கஞ்சா விற்பனை முகவர் ஒருவர் கைது

Ganja 1
Ganja 1

மாங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் ஒன்றினடிப்படையில் கேரளா கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

மாங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினடிப்படையில் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையின் போது 800 கிராம் கேரளா கஞ்சாவுடன விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவரிடமிருந்து 65 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் இரணைமடுவில் வசித்து வருவதுடன் நீண்ட காலமாக இரகசியமான முறையில் கேளர கஞ்சா விற்பனை நடவடிக்கையில் முகவராக செயற்பட்டு வருவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

தற்போது மாங்குளம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.