கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மத்திய நிலையமாக மாற்றப்பட்ட மற்றுமொரு மருத்துவமனை!

unnamed 21
unnamed 21

காலி-கரந்தெனிய மாவட்ட மருத்துவமனையானது இன்று முதல் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவமனையில் ஏனைய நோய்களுக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் பிரனீத் தும்மாதுர தெரிவித்துள்ளார்.