வடமராட்சி – பருத்தித்துறை புனித நகர் பகுதியில் இன்று மாலை வெடிக்காத நிலையில் மோட்டார் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜெ 406 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சோதிலிங்கம் மங்கையர்க்கரசி என்பவருடய வீட்டிலேயே குறித்த வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்னை மரத்திற்கு பாத்தி வெட்டும் போது பழைய 120 எம்.எம் மோட்டர் வெடிபொருள் வெடிக்காத நிலையில் தென்பட்டுள்ளது.
உடனடியாக கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டு, கிராம சேவகர் மூலம் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரால் மோட்டார் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.