மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்த நிலையில் தமது வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம் ஒன்றிற்கு ஏற்றம் அறக்கட்டளை நிறுவனத்தினால் அந்த குடும்பத்திற்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த தீ விபத்து நடைபெற்ற பின்னர் ஆலங்குளம் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் விரைந்து செயற்பட்ட ஏற்றம் அறக்கட்டளை நிறுவனத்தினர் குறித்த குடும்பத்தினருக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை நிறைவேற்றிக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வானது நேற்றைய தினம் (07.11.2020) நடைபெற்றது.
இந்த வீடு தீப்பற்றி எரிந்த காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த குடும்பத்தினர் தனது வாழ்வாதார ஜீவனோபாய தொழிலாக ஆட்டு மந்தைகள் மேய்க்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை குறித்த குடும்பத்திலுள்ள பெண் ஒருவர் விசேட தேவைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த குடும்பமானது பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.