5,000 ரூபா நிவாரணம்பெற வரிசையில் காத்திருந்த பெண் மரணம்!

கொரோனா கால நிவாரணமாக அரசு வழங்கும் 5,000 ரூபா கொடுப்பனவு பெற வரிசையில் காத்திருந்த பெண் கந்தானையில் மயக்கமடைந்து விழுந்து இறந்த பரிதாப சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தபோது, காதிரானாவில் வசிக்கும் 62 வயதான பெண் கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் விழுந்து இறந்தார்.

அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துமாறு நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.