கிழக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோரளைப்பற்று மத்தி – வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து திருகோணமலைக்கு மரணவீட்டிற்கு வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.