கம்பஹா மாவட்டத்தின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதன்படி, இந்த மாதத்திற்கான ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, நாளையும், எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளிலும் அனுமதி வழங்குமாறு, கம்பஹா மாவட்ட செயலாளர் அலுவலகம் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத், மேல் மாகாணத்துக் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓய்வூதியப் பண அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை, ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் கேட்டுக் கொண்டுள்ளார்.