5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டவர் கைது!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற சென்ற நபர் ஒரு கிராம உத்தியோகத்தருடன் முரண்பட்டதை அடுத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் தாயாருக்கு வழங்கப்படவிருந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தனக்கு வழங்குமாறு கோரியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம உத்தியோகத்தருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாகவும், இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.