போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது!

kaithu

திருகோணமலை நிலாவெளி பகுதியில் ஆயிரத்து 50 போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலாவெளி ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விற்பனை நிலையம் ஒன்றில் பொருட்களை கொள்ளையிட்ட சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வீடொன்றினை சோதனையிட்ட போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.