யாழ்.கொழும்புத்துறையில் திடீரென கடல் நீர் நுழைந்ததால் பல குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்.கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று (10) அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது.

இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்.