சிறைக்கைதிகளுக்கு உள்ளூர் மருந்துகள் வழங்கல்!

சிறைக்கைதிகளுக்கு உள்ளூர் மருந்துகளை வழங்க ஆரம்பித்துள்ளதாக சிறை ஆணையர் சந்தனா ஏக நாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை உட்பட பல சிறைச்சாலைகளிலும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.