கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்லவிருந்த நபர் மரணம்!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு செல்லத் தயாரான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீட்டிற்குச் செல்லத் தயாரான நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகச் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

களனி ஹெட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை கொரோனா வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.