கடன் மீள் செலுத்துகையை நீடிப்பு செய்யும் மத்திய வங்கி

f58f7e81 central bank 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
f58f7e81 central bank 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக மற்றும் தனி ஆட்களின் கடன் மீள் செலுத்துகையை 6 மாதத்துக்கு காலம் தாழ்த்தும் சுற்றறிக்கை ஒன்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2020 அக்டோபர் 1 முதல் அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்த கடன் செலுத்துகை நிவாரணத்தை நீடிக்குமாறு மத்திய வங்கி, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மத்திய வங்கியினால் செப்டெம்பர் வரையான காலப்பகுதி வரை இந்த நிவாரணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.