மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுவதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்துபுகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
புகையிரத திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெலிஅத்த கண்டி புத்தளம் மஹவ புத்தளம் அவிஸ்ஸாவலை ஆகிய பகுதிகளில் பயணிக்கும் ரயில் சேவைகள் நாளை முற்பகல் வரை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணிக்கும் ரயில்கள் அளுத்கம அம்பேபுஸ்ஸ கொச்சிக்கடை அவிஸ்ஸாவலை வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.