கொழும்பு காலிமுகத்திடலிற்கு அண்மையில் கட்டுமானத் தளத்தில் பணிபுரியும் பதினான்கு இந்திய தொழிலாளர்களுக்கு கொரோனா!

images 7
images 7

கொழும்பு காலிமுகத்திடலிற்கு அண்மையில் கட்டுமானத் தளத்தில் பணிபுரியும் பதினான்கு இந்திய தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இதனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊழியர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு போர்ட் சிட்டி வேலைத்தளத்தில் 19 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த வேலைத்தளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் அனைவரும் சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் வேறு ஒரு திட்டத்தில் பணிபுரிந்தவர்களுடன் ஒன்றாகத் தங்கியிருந்தவர்கள் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.