ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் நாளை ஆரம்பம்!

625.320.560.350.160.300.053.800.868.160.90
625.320.560.350.160.300.053.800.868.160.90

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதிகொரோனா நிலைமை கருதி தனது நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானித்திருந்தது.

ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுடன் தொடர்புபட்ட கொழும்பு குற்றப் பிரிவின் (சிசிடி) அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.

இதேவேளை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நாளை ஊடகங்களுக்கு திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது