நேற்று முன்தினம் சீனிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தகமானி வெளியிடப்பட்ட போதிலும் சீனியை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுனமான சதொசாவில் சீனிக்கு தட்டுப்பாடு, சீனி இன்றி பலர் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வவுனியா சதொசா விற்பனை நிலையத்திற்கு இன்று சென்ற பலர் சீனிக்கு நிர்ணய விலை தொடர்பான வர்த்தக மானியில் வெளியிடப்பட்டதையடுத்து சீனியை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றபோதிலும் சதொசா விற்பனை நிலையத்தில் சீனி கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து சீனி எடுத்து வரவில்லை. நாளை மறுதினம் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
.
அரசாங்கத்தினால் வர்த்தமானியில் சீனிக்கு நிர்ணய விலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருந்து சீனியை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் . அன்றாட தேவைகளில் ஒன்றான சீனிக்கு வவுனியாவில் கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்வதற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது . வெளியே வர்த்தக நிலையங்களில் பழைய விலைக்கே சீனி விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .