ஸ்ரீலங்கா விமானப்படை வீரர்களும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
தொம்பே மருத்துவமனையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த விமானப்படை வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 08பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே காவல்துறை, இராணுவம் மற்றும் கடற்படை என தொற்று ஏற்பட்டநிலையில் தற்போது விமானப்படைக்கும் தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.