யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தனியார் தொண்டு நிறுவனத்தினரால் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு Humedica and Centre for Women Developmentதொண்டு நிறுவனத்தினரால்ஒரு தொகுதி முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது . தற்போது நாட்டில்உள்ளகொரோனா சூழ்நிலையின் காரணமாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மக்கள் நலன் சார் செயற்திட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த பிரிவினரின் சுகாதாரபாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக Humedica and Centre for Women Developmentதொண்டு நிறுவனத்தினரால் ஒரு தொகுதி முககவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவபிரிவில் இடம்பெற்றது.அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரிடம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உதவிப் பொருட்களை கையளித்தனர். |