மூன்று உள்ளூர் துப்பாக்கிகளுடன் தந்தையும் மகனும் கைது!

202007031339286231 Tamil News perambalur near Tobacco products sales arrest SECVPF 1 3
202007031339286231 Tamil News perambalur near Tobacco products sales arrest SECVPF 1 3

திருகோணமலை மூதூர் காவல்து​றை பிரிவுக்குட்பட்ட சாபி நகர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர் துப்பாக்கிகள் மூன்றினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்களான தந்தையும், மகனும் இன்று (12.11.2020) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூதூர் பகுதியைச் சேர்ந்த 59, மற்றும் 19 வயதுடைய தந்தையும் மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூதூர் விசேட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றியதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.