தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்குவது தொடர்பில் இராணுவத் தளபதி கருத்து!

அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளைய தினம் சில பகுதிகளுக்கு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாளை மேற்கொள்ளும் கணக்கெடுப்பைத் தொடர்ந்து இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தலை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.