லிபியா அருகே புகலிடக் கோரிக்கையாளர்களுடன் படகு விபத்துக்குள்ளாகி 74 பேர் பலி!

லிபியா அருகே 121 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் சுமார் 74 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் புதிதாக பிறந்த குழந்தை உட்பட இதுவரை 47 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலமாக கரைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மெடிட்டேரியன் கடல் பகுதியில் இது போன்ற எட்டு படகு விபத்துகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.