யாழ்ப்பாணத்தில் ஊஞ்சல் கயிறு சிக்குண்டு சிறுமி உயிரிழப்பு!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – கோயில் வீதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சிறுமி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.

ஊஞ்சலில் போடப்பட்ட முடிச்சினை அவிழ்க்க முற்பட்டபோது கதிரையிலிருந்து விழுந்து கயிறு கழுத்தில் சிக்குண்டுள்ளது.

வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தொங்கி கொண்டு இருப்பதைக் கண்டு அவரை மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிறுமி நேற்று உயிரிழந்தார்.